இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். இதுகுறித்த கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின், முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டில், குறைந்த போட்டிகளில், 300 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது எளிதான காரியமல்ல என்று கூறியுள்ளார். மேலும் தற்போதைய சூழலில், உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்வதாக அவர் தெரிவித்தார்.
2017-11-29