இந்தோனேசியாவின் பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்கும் நிலையில் உள்ளது.

இந்தோனேசியாவின் பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை உள்ளது. அதன் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது வெடிக்கும் நிலையில் உள்ளது. 1961ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்துச் சிதறியதில் ஆயிரத்து 100 பேர் உயிரிழந்தனர். இதனால் பாலி தீவில் உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் பாலி தீவில் உள்ள நுகுரோ விமானநிலையம் 2 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்து செல்லும் 445 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *