சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அதனை ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு சமர்பிப்போம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் இக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தாமும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அதனை ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு சமர்பிப்போம் என்று அவர் கூறினார்.

இதனிடையே, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புதியதாக வட்டாட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாகையில் உள்ள மீன்வளப்பல்கலைகழகம் சென்னைக்கு இடம் மாற இருப்பதாக வெளியான தவகல் தவறானது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *