முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் வள்ளல்பெருமான் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வள்ளல்பெருமான் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பதினருக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய அவர் வள்ளல்பெருமானின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு எனவும், கடலூர் மாவட்ட தாழ்த்தபட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *