தமிழக அரசின் பழமையான கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து கண்டறிய தனிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நாகை மாவட்டம் பொறையார் அர்சு போக்குவரத்து கழக பணிமனை கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு எழுச்சிதமிழர் தொல்.திருமாவள்வன் தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். இனிமேலும் இது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க பழமையான கட்டிடஙளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.
டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் ஏற்ப்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.