காரைக்கால் மீனவர்கள்10 பேருக்கு நவம்பர் 2ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்காலில் இருந்து கடந்த 8-ம் தேதி கருணாகரன்,பிரதீபன்,சுப்ரமணி உள்ளிட்ட பத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். அவர்கள், நெடுந்தீவுக்கு தென் கிழக்கே மீன்பித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 10 மீனவர்களையும், அவர்கள் சென்ற ஒரு படகையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீனவர்கள் காவல் முடிவடைந்த நிலையில் அவர்கள் 10 பேரும், இரண்டாவது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.ரியால் மீனவர்கள் 10 பேரையும் வரும் நவம்பர் 2-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார், இதனையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.