பிரதமர் மோடி இருக்கும் வரை அதிமுகவினரை யாரும் மிரட்ட முடியாது… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

பிரதமர் மோடி இருக்கும் வரை அதிமுகவினரை யாரும் மிரட்ட முடியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுகவின் 46வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அதுதான் உண்மையான அதிமுக என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி இருக்கும் வரை அதிமுகவினரை யாரும் மிரட்ட முடியாது என்றும், எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதை தீர்த்து வைக்க பிரதமர் மோடி இருப்பதாக கூறினார். அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *