தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வட திசையில் நகர்ந்து, மசூலிபலிப்பட்டினம் அருகே 875கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மேலும் இது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா பகுதிகளில் நிலைபெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடலின் ஆழ்கடல் பகுதிகள் மற்றும் வட தமிழக கடல்பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் ஆந்திர மற்றும் ஒரிசா மீனவர்கள் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஆழ்கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *