அடுத்த 5 ஆண்டிற்குள் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு நாடுகளும் ஒன்று. எண்ணெய் வளம் மிக்க இந்நாடுகளில் விண்வெளி குறித்த ஆராய்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்பவதற்கான திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தும், அடுத்த 5 ஆண்டுகளில் 4 ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் இந்த முயற்சி தங்களது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *