இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்..
இதனிடையே நாகை, கடலூர் மாவட்டங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.