தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துவிட்ட நிலையில் வரும் 25ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடனும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2017-12-22