10 அணிகள் இடையிலான 4வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் பெங்களுரு எப்.சி அணி, ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் இறுதியில் ஜேம்ஷெத்பூர் அணி பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தது. இதனையடுத்து 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் ஜேம்ஷெத்பூர் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து சென்னையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை எப்.சி அணி – கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன.
2017-12-22