சென்னையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ, காற்றழுத்த தாழ்வு பகுதியோ ஏற்பட வாய்ப்பு இல்லாததால் நிலப்பகுதியை நோக்கி மழை மேகங்கள் வருவது குறைந்துள்ளது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வாய்ப்புகள் குறைந்துள்ளன என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2017-12-18