இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றிருந்தன. தொடரை கைப்பற்றும் 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து 216 எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிகார் தவானின் அதிரடி சதத்தால் 32வது ஓவரிலேயே வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.
2017-12-18