தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. அதுபோல கர்நாடகத்தின் உள்பகுதியில் இருந்து தமிழகத்தின் உள்பகுதி வரை தரைப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. அதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *