இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் இரட்டை சதத்தால், இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதனையடுத்து 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *