தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலைகொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வுமையம், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
2017-11-12