தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று காலை முதலே சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என தெரிவித்தார். கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறிய அவர், சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *