தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய 1500 கோடி ரூபாய் தேவை ; பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை…..

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய பிரதமரிடம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டிருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பெய்து வரும் கன மழை விவரங்களை பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும், மழை, வெள்ள நிவாரணமாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும் கூறினார்.

அப்போது, உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *