தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடைபெறுவதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி மக்களுக்கு திமுக சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன. நான்கு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு துணிகள், அரிசி உள்ளிட்டவற்றை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடைபெறுவதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மழை, வெள்ள பாதிப்புக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், கருணாநிதியுடனான பிரதமர் மோடியின் சந்திப்பில் அரசியல் இல்லை என்றும், உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *