தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரிடம் அவர் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்றும் யாருடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார்.
2017-10-08