தமிழகத்தில் தற்போது 29 வகையான காய்ச்சல் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்கள் காய்ச்சல் வந்த உடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில் எந்த வகையான காய்ச்சல் என பரிசோதித்து உடனே தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தற்போது 29 வகையான காய்ச்சல் உள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *