பாசனத்திற்காக மணிமுக்தா நதி அணை மற்றும் ஆழியாறு அணைகளை திறக்க வேண்டும்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…

பாசனத்திற்காக மணிமுக்தா நதி அணை மற்றும் ஆழியாறு அணைகள் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விழுப்புரம் மாவட்டம் மணிமுக்தா நதி அணையில் இருந்து 2 ம் மண்டல பாசனத்திற்காக அக்டோபர் 22 ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 493 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து 2ம் மண்டல பாசனத்திற்காக அக்டோபர் 25ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்றும், தண்ணீர் திறப்பால் 22 ஆயிரத்து 332 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *