கரூரில் உள்ள தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பணிமனையில், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள தரத்துடன் நகரப் பேருந்து ஒன்றும், புறநகர்ப் பேருந்து ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்துத்துறை விரைவில் மக்கள் விரும்பும் வகையில் நவீனப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இரண்டாயிரம் புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
2017-11-27