சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர உறுதி ஏற்போம் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தமிழறிஞர் முனைவர் மா.நன்னனின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இந்நிகச்சியில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடும் உரிமை வேண்டும் என்ற மா.நன்னனின் கனவு இன்னும் நிறைவேறாமல் இருப்பதாகவும், அந்த கனவை நிறைவேற்ற அனைவருன் உறுதி ஏற்போம் என குறிப்பிட்டார். மேலும் திமுக ஆட்சிக்காலத்தில் தான் மெரினா கடற்கரையில் தமிழ் அறிஞர்களுக்கு சிலைகள் நிறுவப்பட்டதாவகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *