இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வடகிழக்கு பருவக் காற்று காரணமாக அடுத்த இரு வாரங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த ஒரு வார காலத்துக்கு இயல்பைவிட மழை குறைவாக இருக்கும் என்றும், அடுத்த ஒரு வாரத்தில் நாட்டின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களைத் தவிர இதர பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-12-25