இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று இலங்கை அணியை ஒயிட்-வாஷ் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *