வடகொரியாவுக்கு எதிரான ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள் போருக்கு வழிவகுக்கும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களுக்கு 90 சதவீத அளவுக்கு தடை விதித்தல், வெளிநாடுகளில் பணியாற்றும் வடகொரியத் தொழிலாளர்களை வெளியேற்ற 24 மாதங்கள் வரை அளிக்கப்பட்ட காலக்கெடுவை 12 மாதங்களாக குறைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் வடகொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகொரிய பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் தங்கள் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் செயல் என்றும், இது கொரிய தீபகற்பத்தில் போருக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *