தனியார் மருத்துவமனைகள் டெங்கு மரணத்தை அறிவிக்கக் கூடாது என்று தமிழக அரசு மிரட்டல் விடுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 56 குழந்தைகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் , இவர்களில் 24 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதகாவும் தெரிவித்தார்.
டெங்குவிற்கு 40 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக மத்திய குழுவினர் கூறுவது வியப்பளிக்கிறது என்று கூறிய அவர், தனியார் மருத்துவமனைகள் டெங்கு மரணத்தை அறிவிக்கக் கூடாது என்று தமிழக அரசு மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.