சரக்கு மற்றும் சேவை வரி கரணமாக பட்டாசு விற்பனை மந்தமடைந்திருப்பதாக பட்டாசு விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் தீவுத்திடல், நந்தனம், ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட 5 இடங்களில் தீபாவளி பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னையின் மிகப்பிரதான பட்டாசு விற்பனை மையமாக விளங்கும் தீவுத்திடலில், இந்த ஆண்டு 60 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் அனைத்திலும் தீ தடுப்பு அணைப்பான்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள், கடைகளின் எண்ணிக்கையால், மக்களின் வரவேற்பு பெற்ற இடமாக தீவுத்திடல் உள்ளது. புதிய வரவுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளதாகவும்,சரக்கு மற்றும் சேவை வரியால் பட்டாசு விலை சற்றே உயர்ந்திருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் பட்டாசு விற்பனை 47 சதவீதம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்