தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் முக்கியமான பண்டிகையாக தீபாவளி கொண்டாப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை, இனிப்பு வகைகள் வாங்குவதற்கு கடைகளில் கூட்டம், கோவில்களில் சிறப்பு வழிபாடு என்று தமிழகம் முழுவதுமே பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் அசாம்பிவிதங்கள் ஏற்படுவதை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் கண்காணித்து வருகின்றனர். மேலும் தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் தீவிபத்து ஏற்பட்டால் அதனை உடனடியாக அணைக்க தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *