தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு பெற நாம் போராட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பெரியார் திடலில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அனபழகனின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா மற்றும் பழிவாங்கப்படும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமை முழக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வங்கித்துறைகளில் நிரப்பபடாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு பெற நாம் போராட வேண்டும் என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து பேசிய திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், நாம் திராவிடர் என்ற உணர்வை இழக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.