டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது மாசு காரணமாக இலங்கை வீரர் ஒருவர் வாந்தி எடுத்த சம்பவம் நிகழ்ந்தது. டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால், இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு விளையாடினர். நான்காவது நாளில் இலங்கை பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் போட்டிக்கு நடுவே வாந்தி எடுத்தார். இதையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. இதனிடையே, குளிர்காலத்தில் டெல்லியில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
2017-12-06