அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றும் அதே பகுதியில் நிலவுவதால் . அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவித்தார். மேலும் இது வட மேற்கு திசையில், வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திரா கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *