சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றும் அதே பகுதியில் நிலவுவதால் . அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவித்தார். மேலும் இது வட மேற்கு திசையில், வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திரா கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.
2017-12-06