டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பட்டினியால் உயிரிழப்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்துவயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்த பரிதாப சம்பவம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மானசி, பாரோ, சுகோ என்ற அந்தக் குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

பிரேத பரிசோதனையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளின் வயிற்றில் தண்ணீரும் உணவும் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி.குழந்தைகள் பட்டினியால் இறந்ததை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர். குடிசைப் பகுதியில் வசித்து வந்த அவர்கள் வாடகை கட்டாததால் விரட்டப்பட்டு புதிய இடத்திற்கு வந்தனர்.

இந் நிலையில், குழந்தைகளின் தந்தையான மங்கள் என்பவரின் ரிக்சா களவாடப்பட்டதால் அந்தக் குடும்பம் இரண்டு வாரங்களாக வறுமையில் தவித்து வந்தது. வேலை தேடி போன மங்கள் பல நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.குழந்தைகளின் தாய் பீனா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளைப் பராமரிக்க யாருமில்லாமல் பட்டினியால் மூன்று குழந்தைகளும் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *