டெல்லியில் இன்று நாடாளுமன்ற குழு கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்தில் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் நவம்பர் 3–வது வாரத்தில் தொடங்கி, டிசம்பர் 3–வது வாரம் வரை நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் இதுவரை தொடங்காத நிலையில், குளிர்கால கூட்டத்தொடரை கூடிய விரைவில் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று கூடுகிறது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.