டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்…. சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்கிறார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு எந்த முனைப்பையும் காட்டவில்லை என குறிப்பிட்ட எழுச்சித்தமிழர், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், இதில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *