டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கை குறித்து வரும் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, டெங்கு காய்ச்சல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் அக்டோபர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே, தேனி மாவட்டம் போடியை அடுத்த சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்த சிவக்குமாரின் கர்ப்பினி மனைவி ராஜேஸ்வரி டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தார். போடி அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்றும் ரத்த பரிசோதனை சரிவர செய்யாமல் காலம் தாழ்த்தியதே ராஜேஸ்வரி உயிரிழப்புக்கு காரணம் என அவரது கணவர் குற்றம் சாட்டினர்.

நிறைமாத கர்பிணி உயிரிழந்த சம்பவம் ராஜேஸ்வரியின் குடும்பத்தார் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *