கேளிக்கை வரி ரத்து தொடர்பாக தமிழக அரசுடன் திரையுலகினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி… மீண்டும் அமைச்சருடன் பேச பட அதிபர்கள் முடிவு

கேளிக்கை வரி ரத்து தொடர்பாக தமிழக அரசுடன் திரையுலகினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அரசு நிர்ணயித்த கேளிக்கை வரி மற்றும் சினிமா டிக்கெட் விலை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், கருணாஸ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக நடிகர் விஷால் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *