டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த மாதம் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் தங்கியிருந்த உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக அவர்கள் எந்தவித பதிலும் அளிக்காததால், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவு பிறபித்தார். இதற்கு எதிராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கின் விசாரணை, இன்று நடைபெறவுள்ளது. விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தை அழுத்தமாக பதிவு செய்ய இருதரப்பினரும் தயாராகியுள்ளனர்.