சென்னயில் நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள மாநில சுயாட்சி மாநாடு, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அதிகாரக்குவிப்பை தகர்த்திடவும், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு அரசியலில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.