இது தொடர்பாக மைத்ரேயன், கே.பி.முனுசாமி இருவரும் அளித்துள்ள மனுவில், நவனீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோபாலகிருஷ்ணன் ஆகிய மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களும் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் மூவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்ததற்காக 18 சட்டப்பேரவை உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதையும் அந்த மனுவில் எடுத்துக் காட்டி உள்ளனர். மேலும், கட்சியின் எம்எல்ஏக்களாலேயே மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால், கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளும் மூன்று எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மைத்ரேயனும், கே.பி.முனுசாமியும் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது.
2017-11-01