ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு சம்மன்; விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி அதிரடி…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. சென்னை எழிலகத்தில் உள்ள கலசமஹாலில் இயங்கி வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் பலரையும் விசாரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவர் சங்கர் டிசம்பர் 12ஆம் தேதியிலும் ஜெ.தீபா டிசம்பர் 13ஆம் தேதியிலும் தீபக் டிசம்பர் 14ஆம் தேதியிலும் , மாதவன் டிசம்பர் 15ஆம் தேதியிலும் மருத்துவர் மகேந்திரன் டிசம்பர் 19ஆம் தேதியிலும் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பல்லோ தலைவர் விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *