குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவைகளின் 19 மாவட்டங்களில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில், ராஜ்காட், போர்பந்தர், நர்மதா, சூரத், ஜாம்நகர், கட்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத்தில் இன்று மற்றும் 14ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துள்ளது. இரண்டு கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில், பதிவான வாக்குகள் டிசம்பர் 18ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.