ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்தது வரையிலான வீடியோக்களை வெளியட வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு சசிகலா தரப்பினருக்கு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்தது வரை நடந்தது குறித்த முழு காணொலிகளையும் வெளியிட வேண்டும் என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் மதவெறியை நிலைநாட்டி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பாஜகவினர் தரம்தாழ்ந்த வகையில் விமர்சனங்களை முன்வைப்பதாக எழுச்சித்தமிழர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மதம் சார்ந்த வன்முறைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்துள்ள எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், திமுகவுடனான கூட்டணியை பலப்படுத்துவதன் மூலம் மதவாத சக்திகள் தமிழகத்தில் தலைதூக்காமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
சி.ஏ.ஜி முன்னாள் தலைவர் வினோத் ராய் தனது கற்பனையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசுக்கு கால விரயம், பொருள் விரயம், ஏற்படுத்தியதால், அவர் மீது கிரிமினல் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள எழுச்சித்தமிழர், மேல்முறையீடு செய்தால் 2 ஜி வழக்கின் தீர்ப்பில் எந்த வித மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.