தூத்துக்குடியில் விமானத்தில் வைத்து பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா தனது பாஸ்போர்ட்டை நேரில் ஆஜராகி ஒப்படைக்குமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடந்த 2ஆம் தேதி விமானம் மூலம் சென்றார். அதே விமானத்தில் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி சோபியா விமானத்திற்குள் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். இதுகுறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சோபியா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை வரும் 7ஆம் தேதி நேரில் வந்து ஒப்படைக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மனை சோபியாவின் தந்தை சாமியிடம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலிசார் வழங்கியுள்ளனர்.