சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்றுகாலை லேசான நில அதிர்வுஉணரப்பட்டதால் அச்சமடைந்த மக்கள்வீடுகளை விட்டு வெளியேறி சாலையில்தஞ்சமடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம், சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் காலை 7.50 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மேட்டூர் அணையை சுற்றியுள்ள சில ஊர்களிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. சுமார் 2 நிமிடம் வரை உணரப்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவானதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
இதே போல், தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், ஏரியூர், பழையூர், பெரும்பாலை உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இரு மாவட்டங்களில் ஏற்பட்ட நில அதிர்வால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும், வீடுகளில் இருந்த பொருட்களும் கீழே விழுந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்போது நில அதிர்வு ஏற்படுவது வழக்கம் என்றும் பொதுமக்கள் சிலர் கூறியுள்ளனர்.