சேலத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள் குடும்பத்திற்க்கு தலா 1 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…

சேலத்தில் ஆற்று குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் கேம்ப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மோகன், ராஜா, தமிழரசன் ஆகிய 4 சிறுவர்களின் சடலங்கள், கடந்த 18ம் தேதி சேலம் கேம்ப் என்ற இடத்தில் உள்ள, 16 கண் மதகு வழியாக உபரி நீர் செல்லும் ஆற்றின் குட்டை நீரில் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மணிகண்டன், மோகன், ராஜா மற்றும் தமிழரசன் ஆகிய 4 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான்கு சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *