அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை தவிர்ப்பது நல்லது; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல்……..

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை தவிர்ப்பது நல்லது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் அனைத்து கிறிஸ்த்துவ திருச்சபைகளின் ஒருங்கிணைப்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை தவிர்ப்பது நல்லது என்று தெரிவித்த அவர், மதம் சார்ந்த அடையாளங்கள் தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்கும் என்றும் கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரந்தில் தேர்தல் விதிமீறல்கள் அதிகமாக நடைபெறுவதாக எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *