சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளில், முதல் கட்டமாக கொருக்குபேட்டை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்தது.

சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, 9 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. தங்கசாலை முதல் கொருக்குப்பேட்டை வரையிலான 1 புள்ளி 8 கிலோமீட்டர் தூரம் சுரங்க ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றன. இந்த பணி 480 கட்டிடங்கள், 310 கிணறுகள் மற்றும் ஆழ்துளை குழாய்களை கடந்து, நிறைவடைந்துள்ளது. கொருக்குப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான 7 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலங்கள் மூலம் மெட்ரோ ரயில் பயணிக்கும் என்றும், 2019ம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *